பிரம்மம்

 உண்மையாக இருப்பவர்களே....உங்கள் உண்மையை உணருங்கள்



ராமகிருஷ்ண பரமஹம்சர் "பிரம்மம் நித்தியமானது..என்றென்றும் இருப்பது. யாராலும் பிரம்மத்தை எச்சில் படுத்த முடியாது". என்று கூறுகிறார்.




இந்த பிரபஞ்சத்தில் இருப்பவை அனைத்தும், பிரம்மத்தில் இருந்தே தோன்றியவை என்று வேதங்கள், உபநிஷதங்கள் கூறுகின்றன.ரிஷிகள்,சித்தர்கள், ஞானிகள் கூறுகிறார்கள்.

எது அழிவற்று இருக்கோ, எது நித்தியமாக இருக்கோ,ராமகிருஷ்ணர் கூறியதைப்போல் " எதை எச்சில்படுத்த, எதை அசுத்த படுத்த முடியாதோ"..


எது என்றென்றும் பரிசுத்தமாக இருக்கோ, அதுதான் காலத்திற்கும் நிலையாக இருக்கும் "உண்மை".அத்தகையை "உண்மையை" தான் , "பிரம்மம்" என்கிறார்கள் ஞானிகள்.

சமூகத்தால் உருவாக்கப்பட்ட சட்ட,திட்டங்கள்-- நீதி, நேர்மைகள் இவைகள் எல்லாமே பொய்தான்....இவைகள் உண்மை கிடையாது..

ஒருவனுக்கு உண்மையாக இருக்கும் நீதி...மற்றொருவனுக்கு பொய்.ஒருவனுக்கு உண்மையாக தெரியும் சட்டம்...மற்றவனுக்கு அநீதியான சட்டமாக தெரியும்..

இத்தகைய மனிதனால் உருவாக்கப்பட்ட உண்மைகள் எல்லாம் காலத்தால் மாறக் கூடியது... நிலையற்றது. ஆனால் எல்லா காலத்திற்கும் ...எல்லா மனிதர்களுக்கும் ஏற்ற , மாற்றமே இல்லாத ஒன்று இந்த பிரபஞ்சத்தில் இருக்கிறது..


அதுதான்...நிலையாக இருக்கும் பிரம்மம்.

யார் ஒருவன் தனக்குள் இருக்கும்...என்றென்றும் நிலையாக இருக்கும் உண்மையான பிரம்மத்தை அறிந்து "அஹம்பிரம்மஸ்மி" எனும் "நான் கடவுள்" நிலைக்கு செல்கிறானோ...

அவன்...தனது உண்மையான...அழிவற்ற...நித்தியமான வீட்டை அடைந்துவிட்டான் என்று பொருள்...அவன்...பிறப்பு -- இறப்பை கடந்து ,இந்த பூமியில் உடலுடன் இருக்கும்போதே....எங்கிருந்து தோன்றினானோ,அந்த நித்தியமான பிரம்மத்துடன் இணைந்து, கடவுள்நிலையை அடைந்து விட்டான் என்று பொருள்..

இது போல் தன்னை ஆராய்ந்து, தனக்குள் இருக்கும் பிரம்மத்துடன் கலந்து,அஹம்பிரம்மாஸ்மி எனும் கடவுள் நிலையை அடைந்தவர்தான் "புத்தர்".

புத்தர் சொல்கிறார் "இந்த உலகில் மாறாதது என்று எதுவும் கிடையாது. மாற்றம் ஒன்றே நிலையானது" 

"மாற்றம் ஒன்றே நிலையானது" என்று புத்தர் சொல்கிறார்.எது மாற்றத்திற்கு உட்படுகிறதோ, அது பொய் என்று நிருபணமாகிறது.

மாறக்கூடிய பொய்கள் இந்த உலகில் இருக்கும் என்றால், என்றும் மாறாமல் இருக்கும் "உண்மையும்" இந்த உலகில் இருந்தே தீரும்.

"மாற்றம் ஒன்றே மாறாதது" என்று யார் கண்டறிந்து கூறுகிறார்களோ , அவர்கள்தான் என்றும் மாறாமல் இருக்கும் உண்மையானவர்கள்.

இந்த உலகில்....மாறக்கூடியவற்றை அனைத்தையும் விலகி நின்று, எது ஒன்று மாறாமல் பார்த்துக் கொண்டிருக்கிறதோ அதுதான்... காலத்திற்கும் மாறாமல் இருக்கும் "பிரம்மம்".

தனக்குள் இருக்கும் பிரம்மத்துடன் கலந்த புத்தர்....என்றும் மாறாத "உண்மையில்" வாழ்பவர்.

அதனால்தான் பொய்களால் ஆன இந்த உலகத்தில் "மாற்றம் ஒன்றே மாறாதது" என்று உறுதியாக கூற முடிந்தது. ஏனென்றால் புத்தர் ....உண்மையில் வாழ்கிறார்.

என்றும் அழிவற்ற உண்மையில் புத்தர் வாழ்வதால்தான்,..... இன்றும் பல புத்த பிட்சுகளுக்கு "புத்தர்" சூட்சம வடிவில் காட்சி கொடுத்து வழிநடத்துகிறார்..

அதனால்தான்...புத்தர் கூறியுள்ளார் " இந்த உலகில் எப்பொழுதும் நிலைத்திருக்கும் சக்தி "உண்மைக்குதான்" உண்டு".

புத்தர்...2500 வருடங்கள் ஆகியும் மரணமடையாமல் இன்றும் பல மக்களுக்கு காட்சி கொடுத்து, வழிநடத்துவதற்கு காரணம்..புத்தர், தனக்குள் உள்ள உண்மையை கண்டறிந்து அதனுடன் இணைந்து ....மரணமற்ற பெருவாழ்வில் இன்றும் வாழ்ந்து வருகிறார்..

அதனால்தான்....சுவாமி விவேகானந்தர் கூறுகிறார் " பொய் சொல்லி தப்பிக்காதீர்கள்....உண்மையை சொல்லி மாட்டிக் கொள்ளுங்கள். ஏனென்றால் பொய் வாழவிடாது.... உண்மை சாக விடாது".

உண்மைதான்...தனக்குள் இருக்கும் உண்மையை கண்டு...அதனுடன் கலந்தவர்களை " உண்மை ஒருபொழுதும் சாகவிடுவதில்லை".


வாழ்க வளமுடன்.


No comments