உண்ணும் முறை
(i) மென்று சாப்பிடுதல் :
தேவையான அளவு உணவை நன்றாக மென்று, உமிழ்நீருடன் கலந்து சாப் முறை கடினமான உணவை நீர்த்தன்மையாக்கி உட்செலுத்த எச்சில் சாப்பிடும் போது உணவோடு எச்சில் சேருகிறது. வெளியிலிருந்து வார் உள்ளே வந்து கலப்பதற்கு, உணவோடு உணவு சேருவதற்கு எச்சில் உதவியாக இருக்கிறது
(ii) கடைப்பிடிக்க வேண்டியவை :
பழக்கமற்ற உணவை உண்பதும், காலம் தவறியுண்பதும், அளவு மீறியும் முறை மாறியும் உண்பதும் கூடாது. பசித்தவர்கள் முன்னிலையிலும், நாயின் முன்னிலையில் உணவு உண்ணக் கூடாது. பசித்தவர்கள் பார்த்துக் கொண்டிருக்க, அவர்கள் முன்னிலையில் உண்பதால் அவர்களது பார்வையில் உள்ள விஷம் நாம் உண்ணும் உணவையும் விஷமாக்கும். அத்தகைய உணவு உள்ளே போய் குடற்புண்ணை உண்டு பண்ணும்.
உணவு உண்டவுடனேயே சைக்கிளில் பயணம் செய்வதோ, வேகமாக ஓடுவதோ, கடினமான வேலை செய்வதோ, ஆண் பெண் உடலிணைப்பு கொள்வதோ, நீச்சல் அடிப்பதோ கூடாது.
திருமணமான வாலிபர்கள் உண்டவுடன் அதாவது உணவு செரிமானம் ஆகுவதற்கு முன் உடலுறவு கொள்வதாலும், உண்டவுடன் உறங்குவதும், வயிற்றுப்புண்ணை (Peptic Ulcer) உண்டாக்கும். அது குன்மம் என்ற நோயாக வழங்கப் பெறுகின்றது.
(iii) உண்ணும்போது செய்யக் கூடாதவை :
உணவு உண்ணும்போது பேசுவது, சிரிப்பது, உணவை உருண்டையாகப் பிடிப்பது, சிந்துவது, ஒரு விரலை நீக்கிக் கொண்டு உண்பது. மயிர், நரம்பு, எலும்பு, இறந்துபட்ட உயிர்கள் உள்ள உணவை உண்பது, பருகுவதற்காக வைத்துள்ள நீரில் எச்சிலை உமிழ்வது ஆகியவை கூடாதவை.
(iv) வாய் நாற்றம் :
சில அன்பர்களுக்கு வயிறு கோளாறு காரணமாக வாயில் கொஞ்சம் துர்நாற்றம் வீசும். பக்கத்தில் நெருங்குபவர்கள் அருவருப்பு கொள்வார்கள். இவர்கள் போதிய கவனம் எடுத்துக் கொள்ளவே வேண்டும்.பலரோடு நெருங்கி வார்த்தையாட முடியாது. துர்நாற்றம் என்ன காரணம் என்றால் பல்லில் இருக்கக்கூடிய எனாமல் கெட்டுப் போகிறஇடத்திலிருந்து ஒரு திரவம் வர ஆரம்பிக்கும். அந்தத் திரவம் உணவுப் பொருட்களோடு சேர்ந்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.
(v) தண்ணீ ர் :
தண்ணீரைக் குனிந்து குடிப்பதோ, அண்ணாந்து கொண்டு மடமடவென்று (வெடுக்கு வெடுக்கென்று) குடிக்கக்கூடாது. தண்ணீர் உள்ளே போகும்போது இறங்குகிற இடங்களில் உள்ள காற்று சமப்பட (Adjust) வேண்டும். அதற்காக நாம் கொஞ்ச நேரம் கொடுத்தால் தான் நல்லது. அதற்காக ஒவ்வொரு விழுங்காக (Sip) சாப்பிட வேண்டும். ''உணவைக் குடி. நீரை உண்' என்பது முதுமொழி.
(vi) மலச்சிக்கல் :
மலச்சிக்கல் இருப்பதுண்டு. மைதா போன்ற மாவுப் பொருட்களை
அதிகமாக உண்பதாலும் மலச்சிக்கல் உண்டாகும். மலச்சிக்கல் உள்ளவர்கள் இரவு உணவைச் சற்றுக் குறைத்துச் சாப்பிட வேண்டும். கீரை சாப்பிட வேண்டும். தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வர வேண்டும். உடற்பயிற்சி செய்து வர வேண்டும்.
Post a Comment