குடும்ப அமைதியின் நோக்கம்

 உலக சமாதானம் வேண்டுமானால் முதலில் அதற்கு மனித மனதில் அமைதி வந்தாக வேண்டும். தன்னிலை விளக்கத்தின் மூலம்தான் அந்த அமைதி வரமுடியும். தன்னிலை விளக்கத்தை நீங்கள் பெற்றுள்ளீர்கள். அதனைப் பெற்றுவிட்டால் மட்டுமே வந்துவடாது. தன்னிலை விளக்கம் என்றவிளக்கின் வெளிச்சத்தில் உங்கள் வாழ்க்கையைத் திட்டமிட்டு நடத்த வேண்டும். அவ்வெளிச்சத்தில் நீங்கள் வாழும் முறையைச் சோதித்துக் கொள்ள வேண்டும்.



உங்கள் குடும்பத்தில் அமைதி இருக்கிறதா? என ஆராயுங்கள். எல்லோர் வாழ்க்கையிலும் பிணக்குதான் மலர்ந்திருக்கின்றது. பிணக்கானது சிலர் வாழ்க்கையில் சிறியதாகவும் வேறுபலர் வாழ்க்கையில் பெரியதாகவும் இருக்கலாம். பிணக்கில்லாத வாழ்க்கை அமைந்தவன் ஞானி. ஒருவர் பற்றி பரிசோதிக்க கருவி ஒன்று இருக்குமேயானால் அது அவரது குடும்பத்தின் அமைதிதான்.


நீங்கள் கற்க வேண்டிய எல்லா பாடங்களையும் குடும்பத்துக்குள்ளேயே கற்றுக் கொள்ளலாம். மனித இயல் பாடங்களும் கற்கலாம். ஒரு பல்கலைக் கழகத்தையே கூட குடும்பத்துக்கள்ளேயே காணலாம்.

மனைவிக்குத் தெரியாமல் கணவனோ கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேர்த்து வைப்பதும் பின்னால் பணக்குக்கு இடம் தரும். அதனால் இவர்களுக்குள் இருக்க வேண்டிய தெய்வீக உறவு (divine partnership) இருக்காது. எவ்வகையிலும் ஒருவருக்கொருவர் தெரியாமல் வாழக்கூடாது. மனதில் ஒளிவுமறைவு வைத்துக் கொண்டால் குடும்பத்தில் அமைதி வராது.


சிறிய காரணத்திற்காகவும், பெரிய காரணத்திற்காகவும் குடும்பத்தில் பிணக்கு எழலாம். எல்லாக் காரணத்தையும் தொகுத்து, பகுத்து நான்காக்கியிருக்கிறேன். அவை 1. தேவை 2. அளவு 3. தன்மை 4. காலம். இவற்றால் ஒன்றையோ அல்லது இரண்டையோ அல்லது அனைத்தையும் கூட மையமாக வைத்துதான் பிணக்குகள் எழும்.

No comments