வாழ்த்தும் பயனும்



வாழ்வில் வெற்றி பெற வேண்டுமானால், நம்முடன் வாழ்பவர்கள், தொடர்பு கொள்பவர்கள் அனைவரும் நம்மை ஏற்றுக்கொண்டு நம் மீது மதிப்பும், அன்பும் செலுத்த வேண்டும். மற்றவர்களின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்றுத்தான் வாழ்வில் உயர முடியும்.

அத்தகைய அன்பையும், இனிமையையும் காக்க 'வாழ்க வளமுடன்' என்ற தாரக மந்திரத்தை அருட்தந்தை அவர்கள் கொடுத்துள்ளார்கள். அமைதியான மனநிலையில் நம்மோடு தொடர்பு கொள்ளும் ஒவ்வொருவரையும் நினைத்து, வாழ்க வளமுடன் என்று வாழ்த்தும்போது எல்லோரோடும் இணக்கமான உறவு ஏற்படும்.

No comments