தாடாசனம்
நின்ற நிலையில் செய்யும் ஆசனங்கள்
தாடாசனம்
செயல்முறை
1. இரு கால்களையும் சேர்த்து வைத்துக் கொண்டு நிமிர்ந்து நிற்கவும்.
2. குதிகால்களை உயர்த்தி நின்று கொண்டு, மூச்சை இழுத்துக் கொண்டே இரு கைகளையும் பக்கவாட்டில் தலைக்கு மேல் உயர்த்த வேண்டும்.
3. இந்நிலையில் 5 அல்லது 5 நொடி நேரம் இருந்து பிறகு மூச்சை விட்டுக் கொண்டே கைகளைப் பக்கவாட்டில் இறக்கி விடவும். குதிகால்களையும் தரையில் படிய வைத்து விடவும்.
நன்மைகள்
1. நுரையீரல் நன்கு விரிவடைகிறது.
2. மார்புப் பகுதி தசைகள் வலுப்பெறுகின்றன.
3. சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
4. தொடை மற்றும் குதிகால் தசைகள் வலுப்பெறுகின்றன.
Post a Comment