தியானப் பயிற்சிகளின் பலன்கள்
- மன அமைதி, மன விரிவு, மன நிறைவு, சகிப்புத் தன்மை கிட்டும்.
- ஐந்து புலன்கள் மூலம் செலவாகிற உயிர் ஆற்றல் சேமிக்கப்படும்.
- மனதின் ஓர்மைத் தன்மை (Concentration), ஏற்புத் திறன் (Receptivity), அறிவுக் கூர்மை (Intelligence) மற்றும் நினைவுத் திறன் (Memory Power) கூடும்.
- நாளமில்லாச் சுரப்பிகள் (பிட்யூட்டரி, பீனியல்) இயக்கங்கள் சீரடைகின்றன. மன ஆற்றலும், ஆழ்ந்த அமைதியும் கிட்டும்.
- மன இறுக்கம், மனச் சோர்வு சரியாகின்றன. இரத்த அழுத்தம் சீராகிறது.
- தேவையற்ற குழப்பம், பயம் போன்றவற்றில் இருந்து விடுபட முடியும். முகம் பொலிவு பெறும்.
- நிர்வாகத் திறன், முடிவெடுக்கும் திறன், செயல்திறன் கூடுகின்றன.
- மூளைப் பகுதியில் உள்ள அனைத்து சிற்றறைகளும் இயக்கம் பெறுகின்றன. பிரபஞ்ச சக்தியோடு தொடர்பு கொள்ளும் ஆற்றலும் உள்ளுணர்வும் (Intuition) ஓங்கும்.
- எண்ணங்களை ஆராயவும், அகத்தாய்வு செய்யவும் உதவும்.
- சாந்தி தவத்தினால், தியானத்தில் பெற்ற சக்தி உடல் ஆற்றலாகவும், மன ஆற்றலாகவும் மாற்றமடைகிறது.
- மாணவர்களுக்குச் செயல் திறனும், நினைவாற்றலும் கூடுவதால் அதிக மதிப்பெண்கள் பெற உதவும். நல்வாழ்வுக்குத் தேவையான நல் ஒழுக்க பழக்கங்களைக் கற்று அதன்படி வாழ உதவும்.
குறிப்பு:
- தியானப் பயிற்சிகளை மனவளக்கலை ஆசிரியர்கள் மூலம் மட்டுமே கற்றுச் செய்து வரவேண்டும். யாருக்கும் கற்றுக் கொடுக்கக் கூடாது.
- தியானப் பயிற்சியை காலையிலும், மாலையிலும் குறைந்தது பத்து நிமிடம் செய்ய வேண்டும். இருபது நிமிடத்திற்கு மேல் செய்ய வேண்டாம்.
- தவத்தை மனவளக்கலை ஆசிரியர் வழிகாட்டிய காலங்களில் செய்து வர வேண்டும். இது மிக மிக முக்கியம்.
- பெண்கள் மாதவிலக்கு காலங்களில் சாந்தி தவம் மட்டுமே செய்ய வேண்டும்.
- உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் தவறான பழக்கங்களை விட்டுவிடல் வேண்டும்.
Post a Comment