சுகாசனம்
சுகாசனம்
செயல்முறை
- சமமான தரையின் மீது விரிப்பினைப் போட்டு அமர்ந்து கொள்ளவும்.
- இடக் காலை மடக்கி இடது குதிகால் பால் குறிக்கு கீழே அமையுமாறு நெருக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு வலக் காலை மடக்கி இடக் காலின் கெண்டைக் காலில் படியும் வகையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- முழங்கால்கள் தொடை ஆகியன தரையில் படிந்திருக்க வேண்டும். முதுகு நேராக இருக்க வேண்டும். கைகளை முழங்கால் மேல் சின்முத்திரையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
- கண்களை இலேசாக மூடிய வகையில் வைத்துக் கொண்டு புருவ மத்தியில் தியானம் செய்யலாம்.
- நாடி சுத்தி, பிராணாயாமம் ஆகியவற்றையும் இந்த ஆசனத்தில் அமர்ந்து செய்யலாம்.
நன்மைகள்
- வித்தாற்றல் கெட்டிப்படுகிறது.
- பாலுணர்வு சமன்பாடு அடைகிறது.
- மனம் அமைதி நிலையடைகிறது.
- நினைவாற்றல் ஓங்குகிறது. 5. முகப்பொலிவு அதிகரிக்கிறது.
Post a Comment