பர்வதாசனம்
பர்வதாசனம்
செயல்முறை
- பத்மாசனத்தில் உட்கார்ந்து கொள்ளவும்.
- பிறகு இரண்டு கைகளின் உதவியுடன் முழங்கால்கள் இரண்டும் தரையில் இருக்கும்படி வைத்துக் கொண்டு பிட்டத்தை உயர்த்தி முழங்காலில் நிற்க வேண்டும்.
- பிறகு இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி வைத்துக் கொள்ளவும்.
- இந்த நிலையில் நாற்பது முதல் அறுபது விநாடி வரை இருக்கலாம்.
- மூச்சை இயல்பாக இழுத்து விடலாம்.
குறிப்பு
இதைத் திறம்பட பழக பிறர் உதவியோ அல்லது சுவரின் அணைப்பிலே செய்வது சுலபமாக இருக்கும்.
நன்மைகள்
- முழங்கால்கள் உறுதி பெறுகின்றன.
- மூச்சு ஓட்டம் சீர்மையடைகிறது.
- விலா தசைகள் உறுதி பெறுகின்றன.
Post a Comment