பத்மாசனம்
பத்மாசனம்
செயல்முறை
- அமர்ந்த நிலையில் கால்கள் இரண்டையும் நீட்டிக் கொள்ளவும். பாதங்களுக்கு இடையே ஒரு அடி இடை வெளி இருக்க வேண்டும்.
- இடக் காலை மடக்கிப் பாதத்தை வலத் தொடை மீதும், வலக் காலை மடக்கிப் பாதத்தை இடத் தொடை மீதும் வைக்கவும். இரண்டு குதிகால்களும் அடிவயிற்றைத் தொட்டுக் கொண்டு இருத்தல் வேண்டும்.
- தலை, கழுத்து, முதுகுத்தண்டு , ஒரே நேர்க்கோட்டில் இருக்க வேண்டும். கண்கள் அக நோக்காகப் புருவ மையத்தைக் கவனிக்க வேண்டும்.
- கைகள் இரண்டையும் முழங்கால் மூட்டுகளின் மீது சின்முத்திரையில் வைக்கவும்.
- ஐந்து இயல்பான மூச்சு விடும் நேரம் இருந்த பின், முன் நிலைக்கு வரவும்.
- கால்களை மாற்றியமைத்து இதுபோல் செய்யவும்.
நன்மைகள்
- தியானம், பிராணாயாமம், நாடிசுத்தி போன்ற பயிற்சி களுக்கு ஏற்ற ஆசனம்.
- இது மன ஒருமைப்பாட்டிற்குச் சிறந்த ஆசனம்.
- முதுகுத்தண்டு நேராக அமைவதால் அடிவயிறு மற்றும் உள்ளுறுப்புகளின் இயக்கம் சீர்படுகிறது.
Post a Comment