சர்வாங்காசனம்

  சர்வாங்காசனம்



செயல்முறை

  1. மல்லாந்து படுத்துக்கொள்ள வேண்டும்.
  2. மூச்சை இழுத்தபடி இரண்டு கால்களையும் ஒன்று சேர்த்து 90டிகிரி மேலே தூக்கவும்.
  3. முதுகையும், பிட்டத்தையும் உயர்த்திக் கால்களைத் தலைக்கு மேலே உயர்த்தவும். 
  4. இரு முழங்கைகளையும் தரையில் ஊன்றி உள்ளங்கைகளால் இடுப்பைப் பிடித்து உடம்பும், கால்களும் ஒரே நேர்க் கோட்டில் வரும்படிச் செய்யவும். 
  5. கண்கள் கால் பெருவிரலைப் பார்க்க வேண்டும். 
  6.  இந்த நிலையில் ஐந்து மூச்சு விடும் நேரம் இருந்து இயல்பு நிலைக்கு வரவும்.

நன்மைகள்

  1. தலைப்பகுதிக்கு அதிக இரத்தம் பாய்கிறது. 
  2. ஞாபகசக்தி அதிகரிக்கும். மன ஒருமைப்பாடு உண்டாகும். 
  3. தைராய்டு சுரப்பி சீராக இயங்கும்.
  4.  இரத்த நாளங்கள் சுத்தமடையும்.


No comments