நாடி சுத்தி

 நாடி சுத்தி 



செயல்முறை

  1. பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமரவும். 
  2. இடக் கையை சின்முத்திரையுடன் இட முழங்காலில் வைத்துக் கொள்ளவும். 
  3. வலக் கையை நாசிகா முத்திரையில் (ஆள் காட்டி விரல் மற்றும் நடுவிரல் மடக்கி இருத்தல்) வைக்கவும். 
  4. வலக் கை கட்டை விரலை வல மூக்கில் வைத்து அடைத்துக் கொள்ளவும். இட மூக்கு வழியாகக் காற்றைச் சீராக இழுக்கவும். 
  5. பிறகு இட மூக்கை மோதிர விரலால் அடைத்துக் கொண்டு வல மூக்கு வழியாகக் காற்றைச் சீராக வெளிவிடவும். பிறகு அதே மூக்கு வழியாகக் காற்றை இழுத்து, இட மூக்கு வழியாக வெளிவிடவும்.
  6. இது ஒரு சுற்றாகும். உள் மூச்சும், வெளிமூச்சும் சம நேரத்திற்கு இருக்குமாறு பயிற்சி செய்ய வேண்டும். இதே போன்று 5லிருந்து 20 சுற்றுகள் வரை செய்யலாம். 
  7. விடியற்காலையும், மாலையும் பயிற்சிக்கு உகந்த நேரங்களாகும்.

 நன்மைகள்

  1.  உடல் மற்றும் மூளைச் செல்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன. 
  2. நாடி சுத்தியாவதால் தியானம் செய்ய ஏற்றதாகிறது. 
  3. நாடிகள் தூய்மையடையும்போது உடல் இலேசாகிறது. கண்கள் ஒளி பெறுகின்றன. சீரண சக்தி அதிகரிக்கிறது.



No comments